தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக நடைபெற்ற "பசுமை சாம்பியன் விருது -2025 போட்டிகள் .!

கிருஷ்ணகிரி

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக நடைபெற்ற "பசுமை சாம்பியன் விருது -2025 போட்டிகள் .!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக நடைபெற்ற "பசுமை சாம்பியன் விருது -2025 போட்டிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் எடுத்துக்காட்டாக செயல்பட்டு சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி

பசுமை வளர்ச்சி மற்றும் நிலைத்த வளர்ச்சிக்கான சிறப்பாக பங்களிப்பு மேற்கொண்ட குளோபல் கால்சியம் நிறுவனம் (தொழிற்சாலைகள் பிரிவு), கென்னத் ஆண்டர்சன் நேட்சர் சொசைட்டி (தன்னார்வ தொண்டு நிறுவனம்) மற்றும் ஆர்.வி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (கல்வி துறை பிரிவு) ஆகியவற்றிற்கு ரூ.1 இலட்சம் மதிப்பிலான காசோலை மற்றும் விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. வழங்கினார்.

உடன் மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் முத்துராஜ் உள்ளார்.

செய்தியாளர் 

மாருதி மனோ