அருப்புக்கோட்டை தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பாக பக்ரித் பெருநாள் தொழுகை. !

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பாக பக்ரித் பெருநாள் தொழுகை. !

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை

தமிழகம் முஸ்லீம்களால் இன்று (7.6.2025) சனிக்கிழமை ஈதுல் அல்ஹா (தியாகத் திருநாள்) எனப்படும் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடட்பட்டது,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் சார்பாக தமிழகம் முழுவதும் அனைத்து ஊர்களிலும் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை திடல்களில் நடைபெற்றது.

அருப்புக் கோட்டையில் தவ்ஹீத் பள்ளிவாசல் அருகில் உள்ள திடலில்  நடைபெற்ற பெருநாள் தொழுகையில் மாவட்ட பேச்சாளர் சகோ.மதார் சிக்கந்தர் கலந்து கொண்டு பெருநாள் சிறப்புரையாற்றினார்.

அவர் தன் உரையில் ஹஜ்ஜுப்பெருநாள்  என்பது இறைத்தூதர் இப்ராஹிம் அவர்களின் வாழ்வில் செய்த தியாகங்களை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது இந்த பெருநாளை முன்னிட்டு இறைவனுக்காக தியாகம் செய்யப்படும் பிராணிகளின் இறைச்சி ஏழை எளிய மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது எனப் பேசினார், மேலும் இஸ்லாமியர்கள் தாங்கள் வாழும் சமூகத்தினுடைய நன்மைக்காகவும் வளர்ச்சிக்காவும் தங்களுடைய பொருளால், உடல் உழைப்பால் இயன்ற தியாகங்களை செய்ய வேண்டும் என பேசினார்.

பாலஸ்தீனத்தில் இன்று வரை கொல்லப்பட்டு கொண்டிருக்கும் அப்பாவி மக்களின் மறுவாழ்விற்காக பிரார்த்திக்குமாறும் கோரினார்.

இந்த பெருநாள் தொழுகையில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும் கலந்து கொண்டனர். பெருநாளை நண்பர்களுடனும் உறவினர்களுடனும் அழகிய முறையில் கொண்டாடினர்.

செய்தியாளர்

  அன்சாரி