அரசின் முன்னோடி திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம். !
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு செப்டம்பர் -2025, இரண்டாவது வாரத்தில் வருகை புரிவதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் மற்றும் அரசின் முன்னோடி திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர்கள் தே.மதியழகன் (பர்கூர்), ஒய்.பிரகாஷ் (ஓசூர்), ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், ஓசூர் மாநகராட்சி ஆணையர் முகம்மது ஷபீர் ஆலம் இ.ஆ.ப., ஓசூர் சார் ஆட்சியர் திருமதி.ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப. மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ