ஸ்ரீ பிரித்தியங்கரா திருக்கோவிலில் குரு பூர்ணிமா சிறப்பு வழிபாடு .!

ஓசூர்

ஸ்ரீ பிரித்தியங்கரா திருக்கோவிலில் குரு பூர்ணிமா சிறப்பு வழிபாடு .!

ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டம்

ஓசூர் ஸ்ரீ பிரித்தியங்கரா திருக்கோவிலில் குரு பூர்ணிமா சிறப்பு வழிபாடு. திருக்கோயில் ஸ்தாபகர் ஏழுமலை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் வழிபாடு.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராகு ஸ்ரீ கேது அதர்வண ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா திருக்கோவிலில் ஆனி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, குரு பூர்ணிமா சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

மோரணப்பள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராகு ஸ்ரீ கேது அதர்வண ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் பிரத்தியங்கிரா தேவி அம்மன் தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கிறார். அதேபோல மகா கால பைரவர் மற்றும் ஸ்ரீ ராகு ஸ்ரீ கேது ஆகிய தெய்வங்களும் தனி சன்னதி கொண்டுள்ளனர். 

இந்த திருக்கோவிலில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும், கண் திருஷ்டி நீங்கவும், செய்வினை, பில்லி சூனியம், துஷ்ட சக்திகள் போன்றவற்றை அகற்றும் விதமாகவும் மிளகாய் வத்தல் கொண்டு சிறப்பு யாகங்கள் நடத்தப்படுவது வழக்கம். 

மேலும் ஆனி மாதத்தில் வரும் பௌர்ணமி தினம் குரு பூர்ணிமா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், குரு பூர்ணிமா தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக திருக்கோயிலில் ஸ்தாபகர் ஏழுமலை சுவாமிகள் திருவுருவச் சிலை முன்பு அவரது பாதங்களை பூஜைகள் செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

இதன் பின்னர் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, விசேஷ அலங்காரங்களுடன் அம்மன் அருள் பாலித்தார். அதேபோல ஸ்ரீ ராகு ஸ்ரீ கேது, ஸ்ரீ மகா காலபைரவர் ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்து வெள்ளிக்கவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, இரவு நடைபெற்ற யாக சாலையில் மிளகாய் வத்தல் யாகம் வெகு விமர்சியாக நடைபெற்றது.

பின்னர் அம்மனுக்கு மங்கள ஆரத்தி காட்டி பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்த பூஜையில் திருவண்ணாமலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலசப்பாக்கம் டி பன்னீர்செல்வம் அதிமுக பேரவை மாவட்ட இணை செயலாளர் , மற்றும் இன்ஸ்டாகிராம் எம் ஜி ரில்ஸ் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண் சாமி தரிசனம் செய்தார்,

இதில், தமிழகம் மட்டும் இன்றி ஆந்திரா கர்நாடகா மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து கலந்து கொண்டு மா விளக்கு ஏற்றி வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ