இலஞ்சி குமார கோயிலின் சார்பில் இலவச திருமணம் .!

தென்காசி

இலஞ்சி குமார கோயிலின் சார்பில் இலவச திருமணம் .!

இலஞ்சி குமார கோயிலின் சார்பில் இலவச திருமணம்

தென்காசி ஜுலை 3

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை ராஜா அண்ணா மலை புரம் அருள்மிகு கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 32 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து சீர்வரிசை பொருள்களை வழங்கியதை தொடர்ந்து, தென்காசி மாவட்டம் இலஞ்சி அருள்மிகு திருவிலஞ்சி குமாரர் திருக்கோயிலில் திருமணம் நடை பெற்றது.

இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்ட இணைகளுக்கு நான்கு கிராம் தங்கம், மாலை, புஷ்பம், பீரோ, கட்டில், மெத்தை, தலையணை, பாய், கை கடிகாரம், மிக்ஸி, பூஜை பொருட்கள், பாத்திரங்கள் அடங்கிய சீர்வரிசை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இலஞ்சி பேரூர் திமுக செயலாளர் முத்தையா, இலஞ்சி பேரூராட்சி தலைவர் சின்னத்தாய் சண்முகநாதன், இலஞ்சி குமாரர் கோயில் செயல் அலுவலர் சுசிலா ராணி,நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகநாதன் அறங்காவலர் குழு தலைவர் பூவையா, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் இசக்கி ராஜேந்திரன் கதிரவன் இசக்கி அம்மாள், கோவில் அர்ச்சகர் ரமேஷ், கோவில் பணியாளர்கள் அசோக், ஜெயந்தி மற்றும் மணமகன் மணமகள் வீட்டார் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்