தென்காசி மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த முதலமைச்சர். !
தென்காசி
தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சென்னை, அடையாறு சாஸ்திரி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டம் , வீரகேரளம் புதூர் வட்டத்திற்குட்பட்ட கீழக்கலங்கல் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததைத் தொடர்ந்து இன்று கீழக்கலங்கல் ஊராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பழனிநாடார் ராஜா ஆலங்குளம் யூனியன்சேர்மன் திவ்யா மணிகண்டன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டனர்.


செய்தியாளர்
AGM கணேசன்
