சின்ன மோட்டுர் கிராமத்தில் மாபெரும் எருது விடும் விழாவில் 300 க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்பு .!

கிருஷ்ணகிரி

சின்ன மோட்டுர் கிராமத்தில் மாபெரும் எருது விடும் விழாவில் 300 க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்பு .!

கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்ன மோட்டுர் கிராமத்தில் மாபெரும் எருது விடும் விழாவில் 300 க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்பு, குறிப்பிட்ட தூரத்தினை விரைவாக கடந்த எருதுகளுக்கு   தங்க காசுகள் வழங்கப்பட்டது,

கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்ன மோட்டூர்கிராமத்தில் மாபெரும் எருது விடும் திருவிழா நடைப்பெற்றது,

இவ்விழாவில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, வேலூர் மற்றும் ஆந்திரா மாநிலம் குப்பம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300 க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்றன. அரசின் வழிகாட்டுதலின்படி நடத்தப்பட்ட இந்த எருது விடும் விழாவில் கலந்துகொண்ட அனைத்து எருதுகளுக்கும் கால்நடை மருத்துவர்கள் மூலம் மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு வாடிவாசலுக்கு கொண்டு வரப்பட்டு  ஒவ்வொரு எருதுகளாக அவிழ்த்து விடப்பட்டது.

இதில்120 மீட்டர் தூரத்தை மிகக் குறைந்த நேரத்தில் விரைவாக கடந்த எருதுகளின் உரிமையாளருக்கு தங்க காசு வழங்கப்பட்டது, எருது விடும் விழாவில் ஆயிரக்கணக்காமக்கள் மத்தியில் அவிழ்ந்து விடப்பட்ட எருதுகளை இளைஞர்கள் தட்டி உற்சாகப்படுத்தினர்கள். 

இந்த எருது விடும்விழாவினை சின்ன மோட்டுர் ஊர் பொதுமக்கள், ஊர் கவுண்டர்கள் மற்றும் இளைஞர்கள்  சிறப்பாக  செய்திருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ