தென்காசி நகராட்சி தினசரி காய்கறி சந்தை வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டம் .!
தென்காசி

தென்காசி நகராட்சி தினசரி காய்கறி சந்தை வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டம்
தென்காசி ஜூலை 31
தென்காசி நகராட்சி தினசரி சந்தையில் ஏற்கனவே கடை நடத்தி வந்த அனைவருக்கும் புதிய கட்டிடத்தில் கடை ஒதுக்கீடு செய்யக்கோரி இன்று வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தென்காசி நகராட்சி தினசரி சந்தை காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜி.வெங்கடேஷ் கூறியதாவது:
தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட தென்காசி தினசரி காய்கனி சந்தையில் வியாபாரிகளாகிய நாங்கள் சுமார் 40 வருட காலமாக தினசரி குத்தகை செலுத்தி 120 கடைகளை நடத்தி வியாபாரம் செய்து வந்தோம்.
கடந்த 08.11.2023 அன்று அரசு வெளியிட்ட அரசாணை எண்.G.O.(4D) No.45 ன் படி பழைய மார்க்கெட் கடைகளை இடித்து புதிய தினசரி சந்தை கட்டிடம் கட்டும் பணிகளுக்கான ஆணை வெளியிடப் பட்டது.
அந்த சமயத்தில் தென்காசி நகராட்சி ஆணையாளர் எங்களுடைய காய்கனி வியாபாரிகள் சங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பி நகர்மன்ற கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்கள். அப்போது நடந்த கூட்டத்தில் புதிய கட்டிடம் கட்ட வசதியாக எங்களுடைய கடைகளை காலி செய்து தரும்படி கேட்டுக் கொண்டார்கள்.
அதன்படி நாங்களும் எங்களது
வியாபாரம், மற்றும் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் மாற்று இடத்தில் வணிகம் செய்வதற்கு தென்காசி நகர்மன்ற தலைவரிடம் கோரிக்கை விடுத்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்று எங்களுக்கு தென்காசி தென்காசி நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர்மன்ற தலைவரான ஆர்.சாதிர் இருவரும் சேர்ந்து நாங்கள் தொடர்ந்து வியாபாரம் செய்வதற்கு வசதியாக அருகில் உள்ள தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட பூங்கா வளாகத்தில் 100 கடைகளை அமைத்து தொடர்ந்து வியாபாரம் செய்து வர ஏற்பாடு செய்து கொடுத்தனர்.
அதில் நாங்கள் 01.03.2024 அன்று கடைகள் கிடைக்கப் பெற்று நகராட்சி ஆணையாளர் காய்கனி வியாபாரத்திற்கு வழங்கும் உரிய வணிக உரிமம் பெற்று மேலும் உணவு மற்றும் பாதுகாப்பு சான்று பெற்று, தொழில் வரி செலுத்தி காய்கனி வியாபாரம் செய்து வருகிறோம்.
மேற்படி தற்காலிக கடைகளுக்கு நகராட்சிக்கு நேரடியாக வாடகை செலுத்தி வருகிறோம். மேற்படி கடைகளுக்கு கதவுகள், உள் வேலைகள் பார்ப்பதற்கு ஒரு லட்சத்திற்கு மேல் செலவு செய்து காய்கனி வியாபாரம் செய்து வருகிறோம்.
இந்நிலையில் தென்காசி நகராட்சி தினசரி காய்கறி சந்தைக்கான புதிய கட்டிடம் பணி நிறைவு பெற்றுவிட்டது. ஏற்கனவே நாங்கள் பலமுறை கேட்டுக் கொண்ட படி பழைய கட்டிடத்தில் கடை நடத்திய அனைவருக்கும் புதிய கட்டிடத்தில் கடை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். என்று தென்காசி நகராட்சி ஆணையாளர், தென்காசி நகர் மன்ற தலைவர்,தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரிடம் தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்து வருகிறோம்.
இந்நிலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகளை நகராட்சி மூலம் பொது ஏலம் விட முயற்சிப்பதாக அறிகிறோம். ஆகையால் தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட புதிய மார்க்கெட்டில் உள்ள கடைகளை நெடுங்காலமாக காய்கனி வியாபாரம் செய்து வரும் காய்கனி வியாபாரிகளாகிய எங்களுக்கு அரசு அதிகாரிகளால் நிர்ணயிக்கப்படும் நியாயமான மாத வாடகைக்கும், நியாயமான முன் தொகைக்கும், எங்களுடன் புரிந்துணர்வு செய்து தீர்மானித்து பொது ஏலம் தவிர்த்து, ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
ஏற்கனவே இதே தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட புளியங்குடி நகராட்சியில் தினசரி சந்தையில் உள்ள காய்கனி வியாபாரிகளுக்கு இது போன்ற சூழ்நிலையில் பழைய மார்க்கெட் கடைகளை இடித்து புதிய மார்க்கெட்டில் கட்டியுள்ள கடைகளை ஏற்கனவே வியாபாரம் செய்து வந்த காய்கனி வியாபரிகளுக்கே புளியங்குடி நகராட்சி நிர்வாகம் ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளது.
அதைப்போலவே தென்காசி நகராட்சியிலும் பழைய கடைகளை நடத்தி வந்த வியாபாரிகளுக்கு புதிய கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று தென்காசி தினசரி சந்தையில் அனைத்து வியாபாரிகளும் அனைத்து கடைகளையும் அடைத்து கடை அடைப்பு போராட்டம் நடத்தி வருகிறோம்.
தென்காசி நகராட்சியில் வளர்ந்து வரும் காய்கனி வியாபாரிகளாகிய எங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு அடையாமல் இருக்க தமிழக முதலமைச்சர் இந்த பிரச்சனையில் தலையிட்டு தென்காசி நகராட்சி தினசரி சந்தையை நம்பி வாழுகின்ற 500க்கும் மேற்பட்ட காய்கனி வியாபாரிகள் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உடனடியாக உரிய உத்தரவு வழங்க பணிவுடன் வேண்டுகிறோம்.
இதில் காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் வரும் 15.08.2025 அன்று தென்காசி நகராட்சி தினசரி சந்தை காய்கனி வியாபாரிகள் தங்களின் குடும்பத்தோடு இணைந்து உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்துவது என்று நேற்று நடைபெற்ற எங்களது சங்க கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம். என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார். நேற்று நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்தில் தென்காசி நகராட்சி தினசரி காய்கறி சந்தை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜி.வெங்கடேஷ், செயலாளர்,
டி.எஸ்.பாண்டியன், பொருளாளர் கே.டி. நாராயணன், துணைத் தலைவர் சுடலைக்கனி, துணை செயலாளர் திவான் மீரா பிள்ளை, மற்றும் வியாபாரிகள் ஜி.குமார், சிவசுப்பிரமணியன், பி.எம். முருகேசன், காசிப்பாண்டி, முப்பிடாதி கனி, முகம்மது சுபகானி, தாவூத்மைதீன், ஐயப்பன்,உட்பட அனைத்து வியாபாரிகளும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்