புனித சவேரியார் ஆலயத்திற்கு கட்டுமான நிதி ரூபாய் 1 லட்சம் நிதியுதவி. !
தென்காசி

கோவிலாண்டனூர் புனித சவேரியார் ஆலயத்திற்கு கட்டுமான நிதி ரூபாய் 1 லட்சம் பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் மாவட்ட செயலாளர் மா செல்லத்துரை வழங்கினார்
தென்காசி மே 14
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஒன்றியம் பொய்கை ஊராட்சி கோவிலாண்டனூர் புனித சவேரியார் ஆலயம் கட்டுமான பணிக்கு தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான செல்லத்துரை ரூபாய் 1 லட்சம் நிதி வழங்கினார்.
இந் நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சுரேஷ் ,துணைச் சேர்மன் ஐவேந்திரன் தினேஷ், கிளை கழகச் செயலாளர் சபரி ராஜ், ஞான தாஸ், ரஞ்சித், தினகரன், சௌமேஸ், செல்வராஜ், ஸ்டீபன், மைக்கேல், சபரி முத்து, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் முத்துக்குமார், ஸ்டீபன் ராஜ், அச்சன்புதூர் கவுன்சிலர் சண்முகசுந்தரம், சுந்தரபாண்டிபுரம் முருகன், அறக்ககாவலர்குழு தலைவர் நயினாகரம் குமார், கடையநல்லூர் நகர்மன்ற உறுப்பினர் சிட்டி திவான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்