பரூக் நினைவு தொடக்கப் பள்ளியில் விலையில்லா பாடநூல்கள், சீருடை கள் வழங்கும் நிகழ்ச்சி.!

தென்காசி

பரூக் நினைவு தொடக்கப் பள்ளியில் விலையில்லா பாடநூல்கள், சீருடை கள் வழங்கும் நிகழ்ச்சி.!

குடியிருப்பு பரூக் நினைவு தொடக்கப் பள்ளியில் விலையில்லா பாடநூல்கள், சீருடை
கள் வழங்கும் நிகழ்ச்சி

தென்காசி ஜூன் 2

தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ, மாணவியர்கள் வாழ்வில் படித்து முன்னேற வேண்டும் என பல எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழ் நாட்டில் புதுமைப் பெண், தமிழ் புதல்வன், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், மகளிர் விடியல் பயணம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பல்வேறு மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள்.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள குடியிருப்பு பருக் நினைவு தொடக்க பள்ளியில் விலையில்லா பாடநூல்கள், சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி  நடை பெற்றது. இந் நிகழ்ச்சிக்கு மேலகரம் பேரூராட்சி மன்ற தலைவர் வேணி வீரபாண்டியன் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாட நூல்கள் மற்றும் சீருடைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு மேலகரம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜீவானந்தம், மேலகரம் பேரூர் திமுக செயலாளர் சுடலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் சேக் முகமது ரபிக் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் அற்புத சகாய ஷீலா, பத்மாவதி, வீர சுப்புலட்சுமி, சித்ரா மற்றும் மாணவ, மாணவிகள், பள்ளி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்