விபத்தில்லாமல் பயணம் மேற்கொள்ள தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு காணொளி வெளியிடப்பட்டது .!
சென்னை
புத்தாண்டை முன்னிட்டு விபத்தில்லாமல் பயணம் மேற்கொள்ள வாகன ஓட்டி களுக்காக தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு காணொளி வெளியிடப்பட்டது
புத்தாண்டை முன்னிட்டு ஓ.எம்.ஆர் சாலையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் மேடை அமைத்து அதில் வண்ண விளக்குகள் பொருத்தி அதில் பெரிய திரை அமைத்து அதில் இந்த விழிப்புணர்வு காணொளியை ஒளிபரப்பாக்கி வருகின்றனர்
இந்த காணொளியை ஓஎம்ஆர் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிறிது நேரம் நின்று கவனித்து வருகின்றனர்
வீடியோவில் விழிப்புணர்வு அளிக்கும் சிறுமி பெயர் :சத்தியஸ்ரீ (செம்மஞ்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி)
செய்தியாளர்
S S K
