திருக்குறள் திருப்பணி ஆறாம் நாள் வகுப்பு.!
கிருஷ்ணகிரி
திருக்குறள் திருப்பணி ஆறாம் நாள் வகுப்பு
ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி வித்யாலாயா மெட்ரிக் பள்ளி தபோவனம் காவேரிப்பட்டிணம் திருக்குறள் திருப்பணி வகுப்பு நடைப்பெற்றது.
நிகழ்வின் தொடக்கமாக தமிழ் ஆசிரியை திருமதி.சுமதி வரவேற்புரை நிகழ்த்தினார். மதிப்புறு முனைவர் மருதம் க.அருள் முதல்வர் தலைமை வகிக்க, தாளாளர் ந. நாகேந்திரன் முன்னிலை வகித்தார்.

தமிழ் ஆசிரியைகள் திருமதி சரஸ்வதி மற்றும் திருமதி சகுந்தலா சிறப்புரை நிகழ்த்தினார்கள். நிகழ்ச்சியின் முடிவில் பட்டதாரி ஆசிரியை திருமதி கனகவள்ளி நன்றியுரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கல்வியாளர் மு .ஸ்ரீ ரங்கன், ஆசிரியர் ஜெ.பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். நிகழ்ச்சியில் திருக்குறள் திருப்பணி வகுப்பு, மாணவ மாணவியருக்கு சிறப்பாக நடத்தப்பட்டது. இதில் 50 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதில் கலந்துகொண்டு திருக்குறளை ஒப்புவித்த மாணவ மாணவியருக்கு திருக்குறள் புத்தகங்கள் ஆசிரிய பெருமக்கள் மற்றும் தாளாளரால் வழங்கப்பட்டது.
செய்தியாளர்
மாருதி மனோ
