கிருஷ்ணகிரி அருகே உள்ள ஜாகீர் வெங்கடாபுரம் கிராமத்தில் நடைப்பெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே உள்ள ஜாகீர் வெங்கடாபுரம் கிராமத்தில் நடைப்பெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபிரகாசம் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
அனைத்து தரப்பட்ட மக்களும் பயன்பெறும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மூலம் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்பட்டு வருகிறது,.
இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றியம் வெங்கடாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜாகீர்வெங்கடாபுரம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவப்பிரகாசம் துவக்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டு துறைவாரியாக நடவடிக்கை மேற்கொண்டார். இதன் முன்னதாக அரசு துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
மேலும் இந்த முகாமில் வெங்கடாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு மகளீர் உரிமை தொகை, வீட்டுமனைபட்டா, இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம், கல்வி கடன், ரேசன் அட்டை , குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தீர்வு காணுமாறு வேண்டி துறை வாரியாக மனுக்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி பயனடைந்தனர்,
இந்த முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் உமா சங்கர், துணை வட்டார வளர்ச்சி ராஜீவ், ஒன்றிய செயலாளர் தனசேகரன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ