கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்ன சுண்டப்பட்டி கிராமத்தில் எருது விடும் விழாவில் 200 எருதுகள் பங்கேற்பு .!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்ன சுண்டப்பட்டி கிராமத்தில் எருது விடும் விழாவில் 200 எருதுகள் பங்கேற்பு. குறிப்பிட்ட தூரத்தினை விரைவாக கடந்த எருதுகளுக்கு முதல் முறையாக பல்சர் வாகனம் உள்ளிட்ட பலவேறு இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்ன சுண்டம்பட்டி கிராமத்தில் மாபெரும் எருது விடும் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, காவேரிப்பட்டினம், கப்பல்வாடி, நாட்ராம்பாளையம், பர்கூர், மல்லப்பாடி, ஒசூர், வாணியம்பாடி, திருவண்ணாமலை, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ஆந்திர மாநிலம் குப்பம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட எருதுகள் பங்கேற்றிருந்தன,


அரசின் வழிக்காட்டுதலின்படி நடத்தப்பட்ட இந்த எருது விடும் விழாவில் கலந்துக்கொண்ட அனைத்து எருதுகளுக்கும் கால்நடை மருத்துவர்கள் மூலம் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு வாடிவாசலுக்கு கொண்டு வரப்பட்டு ஒவ்வொரு எருதுகளாக அவிழ்த்து விடப்பட்டது.
இதில்120 மீட்டர் தூரத்தை மிக குறைந்த நேரத்தில் விரைவாக கடந்த எருதுகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக பல்சர் வாகனம் உள்ளிட்ட பல்வேறு இருசக்கர வாகனம் உள்ளிட்ட 101 பரிசுகள் விழாக் குழுவினர்கள் சார்பில் வழங்கப்பட்டது. மேலும் இந்த விழாவில் ஏராளமான இளைஞர்கள் மத்தியில் அவிழ்ந்து விடப்பட்ட எருதுகளை இளைஞர்கள் தட்டி உற்சாகப்படுத்தினர்கள்.
இந்த எருது விடும்விழாவினை சின்ன சுண்டம்பட்டி ஊர் கவுண்டர், கிராம இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
