ரூ 3 லட்சம் மதிப்பிலான தங்க நகையை காவல் துறையினரிடம் ஒப்படைத்த திமுக நிர்வாகிக்கு பாராட்டு .!
தென்காசி

தென்காசியில் ரூ 3 லட்சம் மதிப்பிலான தங்க நகையை காவல் துறையினரிடம் ஒப்படைத்த திமுக நிர்வாகிக்கு பாராட்டு
தென்காசி செப் 4
தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியை சேர்ந்த ஆர்.கே. செல்வம் (வயது 39) என்பவர் ஆர்.கே.எஸ். ஃபுரூட்ஸ் என்ற பெயரில் பழங்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
மேலும் இவர் திமுகவில் வல்லம் கிளை செயலளாராகவும், மாவட்ட பிரதிநிதியாகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஆம்னி பேருந்து நிறுத்தம் அருகே, ரம்டான் பழங்கள் மொத்த வியாபாரத்திற்காக ஏற்றி வர செல்லும் போது 30 கிராம் எடை கொண்ட ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள தங்க நகையான கை செயினை கண்டெடுத்துள்ளார்.
இதனையடுத்து, தென்காசி காவல் நிலையத்தை அணுகி காவல் ஆய்வாளர் ராபர்ட் செயின் முன்னிலையில் காவல் உதவி ஆய்வாளர் முருகேஷ்வரியிடம் ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை ஒப்படைத்த திமுக நிர்வாகி ஆர்.கே.செல்வத்தை காவல் ஆய்வாளர் ராபர்ட் செயின் வெகுவாக பாராட்டினார்.
செய்தியாளர்
AGM கணேசன்