உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட 8 வயது குழந்தையின் கண்கள் தானம். !

கிருஷ்ணகிரி

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட 8 வயது குழந்தையின் கண்கள் தானம். !

கோவில் கனி என்கிற எட்டு வயது ஆண் குழந்தை 21 8 2025 அன்று கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் நல குறைவினால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார்.

உடல் நிலை மோசமானதை தொடர்ந்து அவரது பெற்றோர்கள் தன் மகனின் இரு கண்களையும் தானமாக அளிக்க முன் வந்தனர் 

இதைத்தொடர்ந்து கண் பிரிவு சிகிச்சை பேராசிரியர் டாக்டர் சுதாகர் அவர்களின் தலைமையில் கோவில் கனியின் இரு கண் உறுப்புகளைப் பெற்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தர்மபுரிக்கு அனுப்பப்பட்டது.

செய்தியாளர்

மாருதி மனோ