51 மரபு விதை நெற்களை டெல்லியில் காட்சிப்படுத்துதல் .!
கிருஷ்ணகிரி

புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்து 51 மரபு விதை நெற்களை டெல்லியில் காட்சிப்படுத்துவதற்காக விவசாயிகளிடம் வழங்கினார்.
கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம் சார்பாக டெல்லியில் மூன்று நாட்கள் நடக்க இருக்கின்ற இயற்கை கண்காட்சியில் காட்சிப்படுத்த 51 வகை மரபு நெல் விதைகள் புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் 18.08.2025 அன்று காலை 10:30 மணிக்கு புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து ஐயா தலைமை தாங்கி தனது பொற்கரங்களால், டெல்லிக்கு செல்ல இருக்கின்ற இயற்கை விவசாயத்தை போற்றும் தமிழ்நாடு புதுச்சேரி நம்மாழ்வார் இயற்கை உழவர்கள் சங்கம், தமிழ்நாடு புதுச்சேரி நெல் ஜெயராமன் இயற்கை பல பயிர் சாகுபடியாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைந்த தலைவர் இராஜ வேணுகோபால் ஐயா அவர்களிடம் வழங்கப்பட்டது. உடன் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் இருந்தனர்.
கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கத்தின் நிறுவனர் இரா.இராஜா
முனைவர் க.ரேகா ஆகியோர் அனைவரையும் ஒருங்கிணைத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம் கடந்த நான்கு ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட 51 வகை மரபு நெல் விதைகள் கண்காட்சிக்காக இலவசமாக கொடுக்கப்பட்டது.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலாம் சமூக இலக்கியம் மற்றும் இயற்கைப் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் கோ. இளங்கோவன் ஐயா, புதுச்சேரி முப்படை முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் வீரத் தாய்மார்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் சார்ஜன்ட் ந. மோகன் ஐயா, மேனாள் தலைமை ஆசிரியை சேவைச்சுடர் எஸ். வாசுகி ஸ்ரீ ராமமூர்த்தி ஆகியோர் கலந்துக் கொண்டு மரபு நெல் விதைகளை வழங்கினார்கள்.
ழகரம் டிசைனர் & பொத்திக் நிறுவனர் இர. பரமேஸ்வரி வரவேற்புரை வழங்கினார். நிறைவாக மாணவர் தனுஷ் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் விவசாய பெருமக்கள் மற்றும் மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ