ஸ்ரீ சென்னராய சுவாமி திருக்கோயிலில் ஸ்ரீ வேதாந்த தேசிகரின் மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகள் பிரதிஷ்டை வைபவம்.!
கிருஷ்ணகிரி

பேரிகை அருகே ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சென்னராய சுவாமி திருக்கோயிலில் ஸ்ரீ வேதாந்த தேசிகரின் மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகள் பிரதிஷ்டை வைபவம். திரளான பக்தர்கள் பங்கேற்ற சுவாமி தரிசனம்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த பேரிகை அருகே எஸ். தட்டனப்பள்ளியில், அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சென்னராய சுவாமி திருக்கோயிலில், ஸ்ரீ வேதாந்த தேசிகரின் மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகள் பிரதிஷடாபனம் நடைபெற்றது.
அதேபோல பெரிய திருவடி சிறிய திருவடி எனப்படும் ஹனுமான் மற்றும் கருடாழ்வார்களின் உற்சவமூர்த்திகளும் பிரதிஷ்டபனை செய்யப்பட்டது.
இதில் ஏராளமான பக்தாதிகள் வந்திருந்து சுவாமியை சேவித்து சென்றனர்.
செய்தியாளர்
மாருதி மனோ