208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்த முதலமைச்சர். !
தமிழகம்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, அடையாறு, சாஸ்திரி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ. 52 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை மக்கள் பயன்பாட்டிற்காக மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும் ரூ. 60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்களையும் திறந்து வைத்தார்.