31வது மாங்கனி கண்காட்சியில் கம்பன் கழகத்தின் சார்பில் தமிழர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் .!

கிருஷ்ணகிரி

31வது மாங்கனி கண்காட்சியில் கம்பன் கழகத்தின் சார்பில் தமிழர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் .!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பான முறையில் நடந்து கொண்டிருக்கும் 31வது மாங்கனி கண்காட்சியில் கம்பன் கழகத்தின் சார்பில் தமிழர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது. 

இதில் கம்பன் கழக தலைவர் இ.ரவீந்தர் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக  குழந்தைகள் நலக் குழும உறுப்பினர் அ.பன்னீர்செல்வம்  மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் பங்கேற்று நடனமாடி அனைவரையும் மகிழ்வித்த  தேன் தமிழ் நாட்டியாலாயாவின் குழந்தைகள் அனைவருக்கும் புத்தகம்  மற்றும் சான்றிதழ்கள்   வழங்கி சிறப்பு செய்தனர்.

குழந்தைகளை ஒருங்கிணைத்து  நடனத்தின் மூலம்  தமிழர் கலாச்சாரத்தை வெளிப்படுத்திய குரு. டாக்டர் மதுமொழி ஆனந்த் அவர்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியை கம்பன் கழக பொருளாளர் ஸ்ரீரங்கன் தொகுத்து வழங்கினார். 

விழாவில் கம்பன் கழக பொதுச் செயலாளர்  முருகேசன் மற்றும் நிர்வாகிகள் பாலாஜி, பாலமுருகன், ஆசிரியை திருமதி.சித்ரா, மில்லட் முருகன், சிங்காரவேலன் மு.குமரவடிவேல், மின்சார துறை   அசிரியை மு. லதா மற்றும் நடனமாடிய குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆகியோர்  கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியின் இறுதியில் கம்பன் கழக செயலாளர் மருதம் அருள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

செய்தியாளர்

மாருதி மனோ