கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் விதை விற்பனை உரிமம் பெறாமலும், விதைச்சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கும் கடைகள் மீது உரிய நடவடிக்கை .!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் விதை விற்பனை உரிமம் பெறாமலும், விதைச்சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கும் கடைகள் மீது உரிய நடவடிக்கை .!

கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் விதை விற்பனை உரிமம் பெறாமலும், விதைச்சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கும் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று விதை ஆய்வு துணை இயக்குனர் மணி எச்சரிக்கை.

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பழக்கன்றுகள், தென்னகன்றுகள் மற்றும் காய்கறி நாற்றுகள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய, முறையான விதை விற்பனை உரிமம் பெற்று 297 நாற்றுப் பண்ணை உரிமையாளர்கள் விவசாயிகளுக்கு நாற்றுகள் விற்பனை செய்து வருகின்றனர். 

பெரும்பாலான விவசாயிகள் தற்சமயம் தக்காளி, மிளகாய் உள்ளிட்ட காய்கறி பயிர் சாகுபடிக்கு குழித்தட்டு நாற்றாங்காலில் உற்பத்தி செய்யப்படும் நாற்றுகளை நடவு செய்கிறார்கள். மேலும் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் செயல்படும் தனியார் நாற்றுப் பண்ணையாளர்கள் தமிழ்நாட்டில் இதர மாவட்ட விவசாயிகளுக்கும் பழக்கன்றுகள், காய்கறி நாற்றுகளை விற்பனை செய்கின்றனர்.

விதைச்சட்டம் 1966 மற்றும் விதைகள் கட்டுப்பாட்டு ஆணை 1983 ஆகிய சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு விவசாயிகளுக்கு பழக்கன்றுகள் தாங்கள் விரும்பி சாகுபடி செய்யும் இரகத்தின் தரமான காய்கறி நாற்றுகள் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்யவும், தவறு செய்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்வதையும் தமிழ்நாடு அரசின் விதைச்சான்று துறையின் கீழ் செயல்படும் விதை ஆய்வாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

எனவே பழக்கன்றுகள், தென்னகன்றுகள் மற்றும் காய்கறி நாற்றுகள் வணிக முறையில் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் அனைத்து நாற்றுப் பண்ணை உரிமையாளர்களும் உரிய உரிமம் பெற்றிருக்க வேண்டும். உரிமம் பெறாமல் மேற்கண்ட நாற்றுகள் விற்பனை செய்வோர் மீது விதைகள் கட்டுப்பாட்டு ஆணை 1983 சட்டத்தின் படி நீதிமன்ற வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது

மேலும் விதை மற்றும் நாற்றுகள் விற்பனை உரிமம் பெறுவதற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் விதை ஆய்வு துணை இயக்குநர் அலுவலகம் (தொலைபேசி எண்: 04342 230157) அல்லது தங்கள் பகுதிக்கான விதை ஆய்வாளர்களை கேட்டுக்கொள்ளுமாறு
விதை ஆய்வு துணை இயக்குனர் மணி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்

மாருதி மனோ