மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கிய அமைச்சர்கள்.!

தமிழகம்

மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கிய அமைச்சர்கள்.!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி ஃபெஞ்சால் புயலினால் பாதிக்கப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அமைச்சர் அர.சக்கரபாணி, அமைச்சர் சு.முத்துச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து 16 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கே. கோபிநாத், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் Y. பிரகாஷ், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், மாநகர மேயர் சத்யா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.