மேலப்பாவூர் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம் .!
தென்காசி

மேலப்பாவூர் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம்
தென்காசி ஆகஸ்ட் 15
தென்காசி மாவட்டம் மேலப்பாவூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சொள்ளமுத்து மருதையா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை கலந்து கொண்டார்.
இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள்,அரசு அலுவலர்கள் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலர்
பிற துறை அரசு அலுவலர்கள் ஊர்பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் முத்துக்குமார் நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்