தென்காசியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.!

தென்காசி

தென்காசியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.!

தென்காசியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

தென்காசி மே 05

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 534 கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் பெற்றுக் கொண்டார்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 13 ஆயிரத்து 500 வீதம் 94 ஆயிரத்து 500 மதிப்புள்ள மூன்று சக்கர சைக்கிள் களையும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூபாய் 13 ஆயிரத்து 500 மதிப்பிலான நான்கு சக்கர நாற்காலி என மொத்தம் 108000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் கவிதா மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்துராமலிங்கம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுப்புலட்சுமி துணை ஆட்சியர் நம்பிராயர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்