ஸ்ரீ ராகு கேது அதர்வண மகா பிரத்தியங்கிரா திருக்கோயிலில் ஆவணி மாத பௌர்ணமி சிறப்பு பூஜை .!

கிருஷ்ணகிரி

ஸ்ரீ ராகு கேது அதர்வண மகா பிரத்தியங்கிரா திருக்கோயிலில் ஆவணி மாத பௌர்ணமி சிறப்பு பூஜை .!

ஓசூர், ஸ்ரீ ராகு கேது அதர்வண மகா பிரத்தியங்கிரா திருக்கோயிலில் ஆவணி மாத பௌர்ணமி சிறப்பு பூஜை. மிளகாய் வத்தல் யாகத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மோரணப்பள்ளி கிராமத்தில் அமைய பெற்றுள்ள ஸ்ரீ ராகு கேது அதர்வன மகா பிரத்தியங்கிரா தேவி கோயிலில் ஆவணி மாத பௌர்ணமி திருநாள் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. 

முன்னதாக நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ராகு கேது ப்ரீத்தி வழிபாடுகள் நடத்தப்பட்டன.

பின்னர் மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது. 

இதில் வேத மந்திரங்கள் முழங்க மிளகாய் வத்தலை பிரம்மாண்ட வேள்வி குண்டத்தில் பக்தர்கள் செலுத்தி சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் யாகத்தில் மகா பூரண ஆஹூதி சமர்ப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மூலவர் அம்மன் ஸ்ரீ ராகு கேது அதர்வண மகா பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு தங்க கவசம் அணிவித்து அருள் பாலித்தார். தொடர்ந்து அம்மனுக்கு பஞ்சமுக தீப மங்கள ஆரத்தி நடைபெற்றது. 

பின்னர், இந்த திருக்கோயிலில் தனி சன்னிதிகள் கொண்டு அருள் பாலித்து வரும், ஸ்ரீ மகா காலபைரவர் மற்றும் ஸ்ரீ ராகு, ஸ்ரீ கேது பகவான் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு பூஜைகளும் நடைபெற்றன. 

இந்த வழிபாட்டில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் இல்லாது ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் பங்கேற்று வழிபட்டனர். 

இந்த பூஜையின் போது  திருவண்ணாமலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

செய்தியாளர்

மாருதி மனோ