இலஞ்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் .!

தென்காசி

இலஞ்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் .!

இலஞ்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தொடங்கி வைத்தார்

தென்காசி ஆகஸ்ட் 21

தென்காசி மாவட்டம் இலஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட 1 முதல் 7 வார்டுகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இலஞ்சி தனியார் கல்லூரியில் வைத்து நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு இலஞ்சி பேரூராட்சி தலைவர் சின்னத்தாய் சண்முகநாதன், துணைத் தலைவரும் இலஞ்சி பேரூர் திமுக செயலாளருமாகிய  முத்தையா ஆகியோர் தலைமை வகித்தனர். இலஞ்சி பேரூராட்சி செயல் அலுவலர் குமார் பாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுப்பிரமணியன்,ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில்மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகநாதன், இலஞ்சி குமாரர் கோயில் அறங்காவலர் பூவையா, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் இசக்கி பாண்டியன்,மாவட்ட பிரதிநிதி சுடலையாண்டி,
அறங்காவலர் கணேசன், ஒன்றிய பிரதிநிதிகள் கணேசமூர்த்தி,தேவி, வார்டு செயலாளர்கள்
செல்லப்பா, சிவக்குமார், ராஜ், பூதத்தான், வசந்தகுமார், செண்பகம், காளிராஜ், ராஜேந்திரகணேஷ், ரகுபதி, இசக்கி, ராமசுப்பிரமணியன்பரதன், சக்திவேல், மாயா, துரைராஜ், ராமசாமி என்ற வெங்கட்,யோகேஷ் ராமகிருஷ்ணன், மருதாசலம்,
ராஜேந்திரன் பண்டாரம், இளைஞர் அணி கார்த்திக், மருத்துவர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்