சசிகலா பிறந்தநாள் விழா பண்பொழி திருமலை கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு .!
தென்காசி

சசிகலா பிறந்தநாள் விழா பண்பொழி திருமலை கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு
தென்காசி, ஆக -19
தென்காசி மாவட்டத்தில் சசிகலா பிறந்த தின விழாவை முன்னிட்டு பண்பொழி திருமலை கோவிலில் வழக்கறிஞர் பூசத்துரை பாண்டியன் தலைமையில் தங்கத் தேர் இழுத்து வழிபாடு செய்யப்பட்டது.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பிறந்த தினமான ஆகஸ்ட் 18 அன்று அவரது பிறந்த நாள் விழாவினை தென்காசி மாவட்டத்தில்
வழக்கறிஞர் பூசத்துரை பாண்டியன் தலைமையில் சிறப்பாக கொண்டாடப் பட்டது .
அதன்படி தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி திருமலை குமாரசாமி கோவிலில் வழக்கறிஞர் பூசத்துரை பாண்டியன் தலைமையில் தங்க தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்யப் பட்டது அதனைத் தொடர்ந்து திருமலை கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் சசிகலா பெயரில் அர்ச்சனை செய்யப் பட்டது. இதில் ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.மேலும் இஸ்லாமியர்களின் மசூதிகள் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டது.
இந் நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சுப்பையா கண்ணு, தர்மராஜ் என்ற கண்ணன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் செல்லச்சாமி, காளிராஜ், ராமச்சந்திரன், வள்ளிநாயகம், வாசுதேவநல்லூர் ரமேஷ், திருமலாபுரம் நவநீத கிருஷ்ணன், திருப்பதி, ஜெகன், கண்ணன், ஆறுமுகச்சாமி திருமலைக் குமார், சுப்பிரமணியன், ராமச்சந்திரன், பழனிவேல், ஐயப்பன், மற்றும் தொண்டர்கள், பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பூசத்துரை பாண்டியன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்