31- வது அகில இந்திய மாங்கணி கண்காட்சி நடைபெறயுள்ள இடத்தில் பூமி பூஜை.!

கிருஷ்ணகிரி

 31- வது அகில இந்திய மாங்கணி கண்காட்சி நடைபெறயுள்ள இடத்தில் பூமி பூஜை.!

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி சுங்கசாவடி அருகே உள்ள தேவராஜ்  திடலில்  31- வது அகில இந்தியா மாங்கணி கண்காட்சி நடைபெறயுள்ள இடத்தின் பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு  மாவட்ட திமுக செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்.,MLA கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சிதலைவர் ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

உடன் அரசு துறை சார்ந்த அலுவலர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

மாவட்ட செய்தியாளர் 

        மாருதி மனோ