மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் -1993 பாகம் - 1
சட்டம்

ஒவ்வொரு மனிதரும் இந்த உலகில் சுதந்திரமாகவும், மற்றவர்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத, இயற்கையின் நியதிகளுக்கு உட்பட்டு தனது வாழ்க்கையை அமைத்து கொள்வதற்கான உரிமை தான் "மனித உரிமை" எனப்படுகிறது.
மனித உரிமை என்பது இந்த உலகில் பிறந்த எல்லா மனிதர்களுக்கும் உரித்தானது. இதில் ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், ஆண் - பெண் என்பது போன்ற பாகுபாடுகள் கிடையாது. ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள உரிமை என்பது, அவன் சுதந்திரமாக, நலமாக,சுமூகமாக வாழ அவசியமான உரிமையாகக் கருதப்படுகிறது.
https://www.newstodaytamil.com/The-prevention-of-corruption-Act-1988---Part---1
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள மனிதர்களுக்கான சில அடிப்படை உரிமைகள்
1. சமத்துவ உரிமை ( ஷரத்து 14 - 18 )
2 . சுதந்திர உரிமை ( ஷரத்து 19 - 22 ) இந்த பிரிவுக்குள் வரும் உரிமைகள்
பேச்சுரிமை மற்றும் எண்ணங்களை வெளிப்படுத்தும் உரிமை
ஒன்றுபடும் உரிமை
சங்கங்கள் அமைக்கும் உரிமை
நடமாடும் உரிமை
குடியேறி வசிக்கும் உரிமை
பணி செய்யும் உரிமை
3. சுரண்டலுக்கு எதிரான உரிமை ( ஷரத்து 23 - 24 )
4. மதம் சார்ந்த சுதந்திர உரிமைகள் (ஷரத்து 25 - 28)
5. கல்வி மற்றும் பண்பாட்டு உரிமைகள் (ஷரத்து 29 - 30)
6. அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு பரிகாரம் பெறும் உரிமை ஷரத்து (32 - 35)
மு.ர. தொடரும்
சட்டம், குற்றம்,மருத்துவம் என பல விசயங்களை எழுதுவதன் நோக்கம் அனைவரும் அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே.!
ஒவ்வொரு குடிமகனும் சட்டத்தை அறிந்து வைத்திப்பது கடமயே. அதன்படி எழுதுகிறேன்.
அறிந்து கொள்ளுங்கள் அனைவருக்கும் அறியச் செய்யுங்கள் இந்திய அரசியலமைப்பின்பால் உள்ள சட்டங்களை
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi (MR)
தொடர்புக்கு
97 87 41 64 86