திருநங்கை/திரு நம்பிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள 2025-2026-ம் நிதியாண்டிற்கான சிறப்பு முகாம் .!
தென்காசி

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் திருநங்கை/திரு நம்பிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள 2025-2026-ம் நிதியாண்டிற்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில் திருநங்கை /திருநம்பி /இடைபாலினருக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் இம்முகாமில் 12 திருநங்கைகளுக்கு ரூ.1 இலட்சம் மதிப்புள்ள இலவச தையல் இயந்திரங்கள் மாவட்ட சமூகநலன் (ம) மகளிர் உரிமைத் துறை மற்றும் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மூலமாக வழங்கப்பட்டது. மேலும் 4 திருநங்கைகளுக்கு திருநங்கை அடையாள அட்டை வழங்கப்பட்டது. திருநங்கைகளுக்கான ஆதார் அட்டை திருத்தம், முதலமைச்சாின் மருத்துவ காப்பீட்டுத்திட்ட அட்டை விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப் பட்டது.
செய்தியாளர்
AGM கணேசன்