தமிழ்நாடு அறிவியல் இயக்கம்  சார்பாக நலவாழ்வு உரிமையை சட்டமாக நிறைவேற்றக் கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம்..!

தென்காசி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்  சார்பாக நலவாழ்வு உரிமையை சட்டமாக நிறைவேற்றக் கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம்..!

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்  சார்பாக நலவாழ்வு உரிமையை சட்டமாக நிறைவேற்றக் கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம்.


தென்காசி - ஏப் 28


தமிழ்நாடு அறிவியல் இயக்கம்  ஆரோக்கிய உபகுழு சார்பில் நலவாழ்வு நமது உரிமை என்பதை சட்டமாக்க மத்திய அரசை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி தென்காசி மாவட்டத்தில் 100 இடங்களில் ஏப்ரல் மாதம் முழுவதும் இவ்வியக்கம் நடைபெற்று வருகிறது.

ஏன் இந்த சட்டம்  உலகிலேயே அதிக நோய் பாதிப்பு உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. சுகாதார விளைவுகளில் இந்தியா பின் தங்கியுள்ளது. இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவு தரமான வாழ்க்கை என்ன என்பதை தெளிவு படுத்தவில்லை. ஆதலால் நலவாழ்வு உரிமை சட்டம் என்பது உடனடியாக நமக்கு தேவைப் படுகிறது. இது அடிப்படை சட்டமாக மாற்றப்பட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கையாக முன்வைக்கிறோம்.

இதன்படி  மருத்துவ சிகிச்சை முறையில் உள்ள கெடுபிடிகளில் விலை மதிப்பற்ற மனித உயிர்கள் பாதிக்கப்படுவதை தடுத்தல்.
மருத்துவ சேவை வழங்குவதற்கு நிரந்தர பணியாளர்களை பணியமர்த்துதல்
நோயாளிகளுக்கு வெளிப்படையான மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்தல்.
மக்களுக்கான தரமற்ற மருத்துவ சேவை அகற்றப்படும்.

ஜாதி , மதம், இனம், மொழி பாராமல் பாரபட்சமற்ற மருத்துவ உதவி அனைவருக்கும் கிடைக்கும் நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் தேசிய சுகாதார காப்பீட்டின் கீழ் பாதுகாப்பு கிடைக்கும்.

நோயாளியின் உடல் நலப் பராமரிப்பு சிகிச்சையை நோயாளியே தேர்வு செய்ய முடியும்.

உடனடி உயிர் காக்கும் சிகிச்சைக்கான உரிமை காக்கப்படும்

ஒரு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளியை வெளியேற்ற முடியாது.
தரமான மருத்துவக் கல்வியும் - நலவாழ்வும் ஒரே இலக்கு நோக்கி பயணிக்கும்.
உலகில் 73  நாடுகள் நலவாழ்வு சேவை உரிமை சட்டத்தை அமல்படுத்த முன்வந்துள்ளன.

இதற்கு  மத்திய அரசு இந்திய அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய வேண்டியும் உள்ள இந்த பிரச்சாரத்தை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில் முன்னெடுத்துள்ளனர். இதில் உச்சிமாகாளி , ராசு, ஐயப்பன், பார்வதி, பாபு, முருகேசன், சுகன் மரியாள், சண்முக பிரியா, முத்துலட்சுமி, கனகலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டு கையொப்பமிட்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்