இந்தோனேசியாவில் நடைபெறும் ஸ்கேட்டிங் போட்டிக்கு செல்லும் மாணவனுக்கு நிதி உதவி.!
தென்காசி

இந்தோனேசியாவில் நடைபெறும் ஸ்கேட்டிங் போட்டிக்கு செல்லும் மாணவனுக்கு நிதி உதவியை திமுக தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் சிவ பத்மநாபன் வழங்கினார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் பெத்த நாடார் பட்டி ஊராட்சி சாலைப்புதூரில் வசித்து வரும் முத்துராஜ் குமாரர் சந்தோஷ் என்பவர் பாவூர்சத்திரம் அன்னை வேளாங்கண்ணி மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ளார்.
மாணவர் சந்தோஷ் இளம் வயது முதல் ஸ்கேட்டிங் விளையாட்டில் ஆர்வமாக செயல்பட்டு வந்துள்ளார் அதன் அடிப்படையில் மதுரையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்றுள்ளார் அதன் பின்னர் கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்று தற்போது மதுரையில் நடைபெற்ற நேஷனல் அளவிலான போட்டியிலும் வெற்றி பெற்று உலக அளவில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.
வருகிற மே மாதம் 25ஆம் தேதி இந்தோனேசியாவில் நடைபெறுகிற உலக அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்.
நேஷனல் அளவில் மதுரையில் நடைபெற்ற விழாவில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியிடம் சான்றிதழ் பெற்றுள்ளார்
தற்போது இந்தோனேசியா செல்ல இருப்பதால் வீட்டில் விவசாய வேலை செய்து வருவதால் இந்தோனேசியாவில் நடைபெறுகிற ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொள்ள போதுமான நிதி வசதி இல்லாமல் இருக்கிறார் இன்று அவர் தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் வழக்கறிஞர் சிவ பத்மநாதனை சந்தித்து வெளிநாடு விளையாட செல்வது பற்றி கூறினார்.
அவருடைய திறமையை பாராட்டி தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் வழக்கறிஞர் சிவ பத்மநாதன் உதவி தொகையாக ரூபாய் 3000 வழங்கினார்.மேலும் அவர் உதவி எதிர்பார்த்து இருக்கிறார் சந்தோஷ் தற் பொழுது துணை முதல்வர் விளையாட்டுத்துறை அமைச்சர் பாராட்டுகிற விதத்தில் உலக அளவில் நடைபெறுகிற ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்று துணை முதல்வர் கையால் பாராட்டு பெற வேண்டும் எனவும் கூறினார்.
இந்நிகழ்ச்சியின் போது கடையம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெயக்குமார் மாவட்ட பொறுப்பு குழு முன்னாள் உறுப்பினர் மேகநாதன் மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் விமலா ராணி ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் கவாஸ்கர் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக் கழக வழக்கறிஞர் ஹரி கிருஷ்ணன் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற அமைப்பாளர் அருணா பாண்டியன் துரைச்சாமிபுரம் கணேசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்