தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் காட்டகரம் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் வரவு செலவு உள்ளிட்ட கோப்புகளை சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆய்வு.!
கிருஷ்ணகிரி
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் காட்டகரம் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் வரவு செலவு உள்ளிட்ட கோப்புகளை சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம், காட்டகரம் ஊராட்சியின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகள் மற்றும் செலவினங்கள் குறித்து சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக தகவல் கேட்டறிந்தார்.

இதனை அடுத்து பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் உத்தரவின் பெயரில் காட்டகரம் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் வரவு செலவு உள்ளிட்ட பல்வேறு கோப்புகளை சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் பார்வையிட்டு ஆய்வு செய்யலாம் என்று தெரிவித்து இருந்தார்.
இதன்படி டாக்டர் சந்திர மோகன், பர்கூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வரதராஜ் தலைமையில், ஊராட்சி செயலாளர் கஜேந்திரன் முன்னிலையில், காட்டகரம் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை, தெரு விளக்கு அமைத்தல், கிராம சாலை அமைத்தல், குடிநீர் இணைப்பு உராட்சி செயலாளரின் மாத ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சந்திரமோகன் காட்டகரம் ஊராட்சிக்கு உட்பட்ட 23 கிரமங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் மற்றும் வரவு செலவுகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல் கேட்கப்பட்டது.

இதனை அடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் உத்தரவின்படி கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தபோது நான் கேட்டு இருந்த தகவல் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட்டு வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது போன்ற தகவல் அறியும் உரிமை சட்டத்தினை நடை முறைப்படுத்தி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கு புகழாரம் சூட்டினார். அப்போது நுகர்வோர் அமைப்பினை சேர்ந்த ஜெய்சன் உடன் இருந்தார்.
செய்தியாளர்
மாருதி மனோ
