கிருஷ்ணகிரியில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிய பாரா விளையாட்டு அரங்கம் .!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புதிய பாரா விளையாட்டு அரங்கம் அமைக்க கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்.,MLA, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சிதலைவர் ச.தினேஷ்குமார், இ.ஆ.ப.,ஆகியோர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர்.
உடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,அனைத்து அணிகளின் தலைவர்கள்,துணை தலைவர்கள் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளை கழக செயலாளர், வாக்கு சாவடி முகவர்கள், கழகத் தோழர்கள், என அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்...
செய்தியாளர்
மாருதி மனோ
