மதுரையில் முன் விரோதம் காரணமாக ரௌடி வெட்டிக் கொலை. !
மதுரை

மதுரை மாவட்டம் பெருங்குடி அருகேயுள்ள அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கருமலை. கடந்த ஆண்டு, முனீஸ்வரன் என்ற நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கருமலை மற்றும் அவரது அண்ணன் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
வழக்குத் தீர்ந்து தற்போது கருமலை வேறு பகுதியில் வசித்து வந்த நிலையில், சமீபத்தில் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அம்பேத்கர் நகர் பகுதியில் திரும்பி வந்தார்.
இந்த தகவலை அறிந்த ஆறு பேர் கொண்ட கும்பல், கருமலையை தாக்கி வெட்டிக் கொலை செய்துள்ளனர். அவர் உடன் வந்திருந்த நண்பர் பாலமுருகன் என்பவரும் வெட்டப்பட்டு படுகாயமடைந்த நிலையில் தப்பியோடி, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், கருமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த தாக்குதல் பழிவாங்கும் நோக்கத்தில் நடந்ததா என்பது உள்ளிட்ட கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.