பெரிய மோட்டூர் கிராமத்தில் நடைப்பெற்ற மாபெரும் எருது விடும் விழா.!

கிருஷ்ணகிரி

பெரிய மோட்டூர் கிராமத்தில் நடைப்பெற்ற மாபெரும் எருது விடும் விழா.!

கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரிய மோட்டூர் கிராமத்தில் நடைப்பெற்ற மாபெரும் எருது விடும் விழாவில் 300 எருதுகள் பங்கேற்பு, குறிப்பிட்ட தூரத்தினை விரைவாக கடந்த எருதுகளுக்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரிய மோட்டூர் கிராமத்தில் 1ம் ஆண்டு மாபெரும் எருது விடும் திருவிழா நடைபெற்றது,


 
இவ்விழாவில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் , தர்மபுரி, வேலூர்  மற்றும் ஆந்திரா மாநிலம் குப்பம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300 எருதுகள் பங்கேற்றிருந்தன. அரசின் வழிக்காட்டுதலின்படி நடத்தப்பட்ட இந்த எருது விடும் விழாவில் கலந்துகொண்ட அனைத்து எருதுகளுக்கும் கால்நடை மருத்துவர்கள் மூலம் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு வாடிவாசலுக்கு கொண்டு வரப்பட்டு,  ஒவ்வொரு எருதுகளாக அவிழ்த்து விடப்பட்டது.

இதில்120 மீட்டர் தூரத்தை மிக குறைந்த நேரத்தில் விரைவாக கடந்த எருதுகளின் உரிமையாளருக்கு இருசக்கர  வாகனங்கள் மற்றும் பல்வேறு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டது, எருது விடும் விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அவிழ்ந்து விடப்பட்ட எருதுகளை இளைஞர்கள் தட்டி உற்சாகப்படுத்தினர்கள். 

இந்த எருது விடும்விழாவினை பெரிய மோட்டூர் ஊர் பொதுமக்கள்,ஊர் கவுண்டர்கள் மற்றும்இளைஞர்கள்  சிறப்பாக  செய்திருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ