மாராத்தன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் பாராட்டு. !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் நடைபெற்ற I2 K ,5.Km மாரத்தான் போட்டியில் 14 வயது உட்பட்டோருக்கான பிரிவில், குணா மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவிகளான எம்.கிருத்திகா முதல் இடத்தையும், மாணவி எச்.இத்திகா இரண்டாம் இடமும் பெற்றார்.

அதேபோல் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில், 11 ம் வகுப்பு மாணவன் வி.பிரிதிவ், முதல் பரிசினை பெற்றார். இவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது
பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
