புதிய பேருந்திற்கு திரிஷ்டி சுத்தி ஆரத்தி எடுத்த பொதுமக்கள். !

கிருஷ்ணகிரி

புதிய பேருந்திற்கு திரிஷ்டி சுத்தி ஆரத்தி எடுத்த பொதுமக்கள். !

ஒசூர் அருகே இதுவரை பேருந்தே வராத குக்கிராமம்: அரசு பேருந்திற்கு திருஷ்டி சுற்றியும், எம்எல்ஏக்கு நன்றிக்கூறி நெகிழந்த மக்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரிகை அருகே மாநில எல்லையில் உள்ளது எலுவப்பள்ளி என்னும் குக்கிராமம். இந்த கிராமத்தின் வழியாக அரசு பேருந்து இயக்கப்பட வேண்டுமென்பது கிராம மக்களின் நீண்ட நாள் கனவு,

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் ஒசூர் தொகுதியில் போட்டியிட்ட திமுகவின் பிரகாஷிடம் கிராம மக்கள் அரசு பேருந்தை கிராமத்திற்குள் இயக்க கோரிக்கை விடுத்திருந்தனர்..

ஒசூர் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற Y.பிரகாஷ் எலுவப்பள்ளி கிராமத்திற்குள் அரசு பேருந்தை இயக்கிட தமிழக சட்டமன்றத்தில் குரல் கொடுத்திருந்தார். இந்தநிலையில் இன்று முதன்முறையாக பேரிகையிலிருந்து எலுவப்பள்ளி வழியாக திம்மசந்திரன் பகுதிக்கு 31ம் எண் கொண்ட அரசு பேருந்து சேவை இன்று தொடங்கப்பட்டது.

எலுவப்பள்ளி என்னும் கிராமத்திற்குள் முதல்முறையாக அரசு பேருந்து வந்ததை கிராம மக்கள் மகிழ்ச்சியோடு பார்த்த நிலையில் பேருந்தை அலங்கரித்து பேருந்திற்கு திருஷ்டி கழித்து இனிப்புகளை வழங்கி கிராம மக்கள் சந்தோசத்தை வெளிப்படுத்தினார்கள்.

மேலும் பல ஆண்டுகளாக ஒசூர் தொகுதியில் வெற்றி பெற்ற பலரிடம் கோரிக்கை வைத்தும், அதை நிறைவேற்றி தந்த ஒரே எம்எல்ஏ என பிரகாஷ் அவர்களையும், இதற்கு பெரும் உதவியாக திமுக சூளகிரி ஒன்றிய செயலாளர் நாகேஷ் அவர்கள் இருந்ததாக அவர்களிடமே கூறி நெகிழ்ந்தனர்..

பேருந்து சேவையை துவக்கி வைத்த எம்எல்ஏ பிரகாஷ் அவர்கள், கிராம மக்களை பேருந்தில் ஏற்றி ஒரு ரவுண்ட் அழைத்து சென்றதும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்பஅதிர்ச்சி அடைந்தனர். அப்போது ஒசூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் லோகேஷ் ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ