உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் .!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே உள்ள மாதேப்பட்டியில் சமுதாய கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஒன்றிய செயலாளர் ஆகியோர் துவக்கி வைத்து முகாமை பார்வையிட்டனர்.
அனைத்து தரப்பட்ட மக்களும் பயன்பெறும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மூலம் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்படமுத்துத்தூர் மற்றும் பாலகுறி ஆகிய இரு ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் அவர்களின் உத்தரவின்படி மாதேப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் நடத்தப்பட்ட இந்த முகாமிற்கு கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்களான சிவபிரகாஷம், உமாசங்கர் மற்றும் ஒன்றிய செயலாளர் தனசேரன் ஆகியோர் துவக்கிவைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
இதன் முன்னதாக அரசு துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டன.


மேலும் இந்த முகாமில் பாலகுறி, செம்படமுத்தூர் ஆகிய இரு ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான
பொதுமக்கள், மகளீர் உரிமை தொகை, வீட்டுமனைபட்டா, இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம், கல்வி கடன், ரேசன் அட்டை , குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தீர்வு காணுமாறு வேண்டி துறை வாரியாக மனுக்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி பயனடைந்தனர்.
மேலும் இந்த சிறப்பு முகாமில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் மட்டுமின்றி முன்னாள் ஊராட்சி மன்றதலைவர் லட்சுமணன், ஊராட்சி செயலாளர் சிவகுமார் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துக்
கொண்டு சிறப்பித்தனர்கள் .
செய்தியாளர்
மாருதி மனோ
