கடையம் அருகே அரசு பேருந்தும் வேனும் மோதி விபத்து - 6 பேர் படுகாயம் போலீசார் விசாரணை ."
தென்காசி

கடையம் அருகே அரசு பேருந்தும் வேனும் மோதி விபத்து - 6 பேர் படுகாயம் போலீசார் விசாரணை
தென்காசி ஜூன் 22
தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள முதலியார்பட்டி பகுதியில் தென்காசி நோக்கி வந்த அரசு பேருந்தும், அதற்கு பின்னால் ரவண சமுத்திரத்தில் இருந்து குற்றாலம் நோக்கி திருமண நிகழ்ச்சிக்காக வந்த வேனும் சென்ற போது, அரசு பேருந்து டிரைவர் திடீரென பிரேக் பிடித்ததாக கூறப்படுகிறது. இதில் பஸ் மீது வேன் மோதியது.
இதில வேனில் இருந்த 4 பேரும், பேருந்தில் இருந்த 2 பேரும் பலத்த காயமடைந்தனர் காயம் அடைந்த ஆறு நபர்களும் தென்காசி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கடையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.