2026 ல் அதிமுக பாஜக ஆட்சி அமையும் தென்காசியில் பாஜக எம்எல்ஏ காந்தி பேட்டி.!

தென்காசி

2026 ல் அதிமுக பாஜக ஆட்சி அமையும் தென்காசியில் பாஜக எம்எல்ஏ காந்தி பேட்டி.!

2026 ல் அதிமுக பாஜக ஆட்சி அமையும் தென்காசியில் பாஜக எம்எல்ஏ காந்தி பேட்டி

தென்காசி ஜூன் 14

மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியில் - இந்தியா அனைத்து துறைகளிலும் வளர்ச்சி கண்டுள்ளது - தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நாளிதழ்களை பார்த்தாலே தெரியும் என்று தென்காசியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. காந்தி பேட்டியளித்தார்.
மத்தியில் மோடி அரசு பொறுப்பு ஏற்று 11 ஆண்டுகள் ஆன நிலையில் அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்து சொல்லும் வகையிலான ஆலோசனை கூட்டம் தென்காசி மாவட்ட பா.ஜ.க. சார்பில் தென்காசி யோகா டவர்ஸ் கூட்டரங்கில் வைத்து  நடை பெற்றது.

கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி தலைமை வகித்தார். நகரத் தலைவர் சங்கரசுப்பிர மணியன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் காந்தி சிறப்புரையாற்றி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் காந்தி எம்.எல்.ஏ. பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டின் பிரதமராக மோடி பொறுப்பேற்று 11 வது ஆண்டு நாட்டுக்கு அவர் செய்த சாதனைகளை மக்களுக்கு எடுத்து சொல்லும் வகையில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியா உலக பொருளாதாரத்தில் 10வது இடத்தில் இருந்து தற்போது 4வது இடத்திற்கு உயர்த்திருக்கிறது.
இந்தியாவை உலகளவில் தரம் உயர்த்த பிரதமர் மோடி பாடுபட்டு வருகிறார்.

செந்தூர் ஆப்ரேஷன் மூலம் இந்தய இராணுவ பலத்தை உலகிற்கு காட்டி இருக்கிறோம்.
மிகப்பெரிய இராணுவ பலம் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது

விவசாயத்தை நாட்டில் பலப்படுத்திக் கொண்டு இருப்பதுடன் விவசாயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

சிறுகுறு தொழிலில் வளர்ச்சி என அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேறி வருகிறது.
பசுமை விமான நிலையம் இரயில் நிலையத்தை நவீன மயமாக்குதல் என வளர்ச்சி அடைந்துள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேட்கவே வேண்டாம். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பாதுகாப்பு இல்லை. கற்பழிப்பு கொலை கொள்ளை இல்லாத நாளே இல்லாத நிலை உள்ளது.

முருக மாநாடு முருகர் குறித்த மாநாடே தவிர அரசியல் மாநாடு இல்லை.
முழுக்க முழுக்க சமய மாநாடு அது, முருகரின் பெருமையை உலக அளவிற்கு கொண்டு செல்கிறோம்.
2026 ல் அதிமுக பா.ஜ.க. ஆட்சி அமையும் என  அவர் கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்