சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் மின்விசை பம்புவுடன் கூடிய தண்ணீர் தொட்டி திறப்பு விழா.!

தென்காசி

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் மின்விசை பம்புவுடன் கூடிய தண்ணீர் தொட்டி திறப்பு விழா.!

சிந்தாமணியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் மின்விசை பம்புவுடன் கூடிய தண்ணீர் தொட்டி திறப்பு விழா

பழனிநாடார் எம் எல் ஏ திறந்து வைத்தார்

தென்காசி மே 23

தென்காசி மாவட்டம் மேலகரம் அருகே உள்ள சிந்தாமணியில் ரூபாய் மூன்று லட்சம் மதிப்பீட்டில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2024- 25 வார்டு எண் 31 ல் சிறு மின்விசை பம்புடன் கூடிய தண்ணீர் தொட்டி திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடை பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவருமான எஸ். பழனி நாடார் தலைமை வகித்து தண்ணீர் தொட்டியினை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், வார்டு கவுன்சிலர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் வட்டாரத் தலைவர்கள் பெருமாள், கதிரவன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஏஜிஎம். கணேசன், சந்தோஷ், மாவட்டத் துணைத் தலைவர் சண்முகவேல், பொருளாளர் ஈஸ்வரன், பேச்சாளர் ஆய்க்குடி பெரியசாமி,
சிந்தாமணி சண்முகவேல், சித்திக், கவுன்சிலர்கள் ரபிக், சுப்பிரமணியன், திமுக தென்காசி நகர பொருளாளர் சேக் பரீத்,
நகராட்சி உதவி பொறியாளர் ஜெயப்பிரியா,
ஒப்பந்ததாரர் கடையநல்லூர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்