தென்காசியில் வளர்ச்சிபணிகளை செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர்.!

தென்காசி

தென்காசியில் வளர்ச்சிபணிகளை செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர்.!

தென்காசியில் வளர்ச்சிபணிகளை செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர்

தென்காசி, ஏப் - 29

தென்காசி மாவட்டத்தில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை செய்தியாளர்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை செய்தியாளர்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்ததாவது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அதனடிப்படையில் இன்றைய தினம் தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் புளியரை ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக 4 வகுப்பறைகள் கட்டும் பணிகளையும், புதியதாக ரூ.66.75 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கிணறு வெட்டும் பணியினையும், கற்குடி ஊராட்சியில் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய நூலகத்தினை பார்வையிட்டும், இலத்தூர் ஊராட்சியில் ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயனாளியின் வீட்டினை பார்வையிட்டும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.310 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயனாளியின் வீட்டினை பார்வையிட்டும், ரூ.120 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப் பட்டுள்ள ஆரம்ப சுகாதார மையத்தினை பார்வையிட்டும், கிளாங்காடு ஊராட்சியில் ரூ.4265 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள கிராம ஊராட்சி செயலகத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதஅதனைத் தொடர்ந்து, கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஊர்மேலழகியான் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.3.5 லட்சம் மதிப்பீட்டில் பழுது நீக்கம் செய்யப்பட்ட பள்ளிக் கட்டிடங்களை பார்வையிட்டும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.4.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறிய சமுதாய சுகாதார வளாகத்தினை பார்வையிட்டும் கூட்டுறவு வங்கி அருகே ரூ.16.55 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தினையும், வேலாயுதபுரம் ஊராட்சியில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறு பாலத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பொய்கை ஊராட்சியில் ரூ.237.650 லட்சம் மதிப்பீட்டில் திரிபுரசுந்தரபுரம் முதல் ஆவுடையாள்புரம் வரை செல்லும் சாலை அமைக்கும் பணி குறித்தும், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற் 390 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் வட்டார நாற்றாங்கால் பண்ணையினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுஅனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என உரிய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்ணான்டோ, செங்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமலைச்செல்வி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராம சுப்பிரமணியன், செங்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேலம்மாள், முருகேசன், பொறியாளர் சுப்பிரமணியன், யூனியன் கவுன்சிலர் சுப்புராஜ், புளியரை ஊராட்சி மன்றத்  தலைவர் ஐயா அழகிய திருச்சிற்றம்பலம், துணைத் தலைவர் லட்சுமி, ஊராட்சி செயலாளர் இசக்கி, மக்கள் நலப் பணியாளர் பண்டாரசிவன், கற்குடி பஞ்சாயத்து தலைவர் முத்துப்பாண்டி, ஊராட்சி செயலாளர் இசக்கி,  மக்கள் நலப் பணியாளர் பாலமுருகன், இலத்தூர் பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சுமி ரமேஷ், யூனியன் கவுன்சிலர் கன்னிமுத்து,  ஊராட்சி செயலாளர் கண்ணன், மக்கள்நலப்பணியாளர் சொர்ணம், சீவநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்துமாரி, ஊராட்சி செயலாளார் திருமலைக்குமார், மக்கள் நல பணியாளர் கருணாநிதி,
கிளாங்காடு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன், துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், யூனியன் துணைத் தலைவர் கலா,வேலாயுதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் வேலுத்தாய், துணைத் தலைவர் சுரேஷ் பாண்டியன், ஊராட்சி செயலாளர் சீனி அம்மாள், ஊர் மேலழகியான் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துராஜ், துணைத்தலைவர் உஷா ராணி, ஊராட்சி செயலாளர் பெரிய மாரித்துரை, கடையநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மா, ராமநாதன், மற்றும் அனைத்து செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர் கள், புகைப்படக்காரர்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்