இந்திய குடியுரிமை சட்டம் 1955 பாகம் - 5

Indian citizenship

இந்திய குடியுரிமை சட்டம் 1955  பாகம் - 5

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான குடியுரிமை பிரிவு ( பிரிவு  2 EE )

இந்திய வம்சாவளியை கொண்டவரும் திருத்தப்பட்ட சட்டத்தில் குறிப்பிட்டுள்ள (அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து) உள்ளிட்ட 16 நாடுகளில் குடியுரிமை பெறுவதற்கு முன் இந்தியப் பிரஜையாக இருந்தவரும், வெளிநாடு வாழ் இந்திய குடிமகனாக் கருதப்படுவார்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான குடியுரிமை திட்டத்தின் கீழ் மனு செய்பவர்களுக்கு, பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாஸ்போர்ட்டில், இந்தியாவிற்குள் எப்போது வேண்டுமானாலும் நுழைய வழி செய்யும் சிறப்பு நுழைவு அனுமதி ( OCI "U" - VISA ) ஒட்டப்படும்.

தகுதிகள் 

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான குடியுரிமைத் திட்டத்தின் மனு செய்ய, ஒருவருக்குப் பின்வரும் தகுதிகள் ஏதேனும் உடையவராக இருக்க வேண்டும்.

1950 ஜனவரி 20 ஆம் தேதி அன்று, இந்திய குடிமகனாக இருப்பதற்குத் தகுதி உடையவராக இருந்திருக்க வேண்டும்.

1950 ஜனவரி 20 ஆம் தேதி அன்றோ அல்லது அதற்குப் பிறகோ இந்திய குடிமகனாக இருந்திருக்க வேண்டும்.

1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவின் பகுதியாக இணைத்துக் கொள்ளப்பட்ட பகுதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

மேலே குறிப்பிடபட்டவர்களின் மகன் / மகளாகவோ, பேரன்/ பேத்தியாகவோ இருக்க வேண்டும்.

பாகிஸ்தான் அல்லது பங்களாதேஷ் நாட்டின் குடிமகனாக இருந்திருக்கக் கூடாது. மேலும் அவர்கள் வசிக்கும் நாட்டின் சட்டம் இரட்டைக் குடியுரிமையை அனுமதிப்பதாக இருக்க வேண்டும்.

வெளிநாடுவாழ் இந்தியர்கள் பெறும் சலுகைகள்

இந்தியாவிற்கு வரும் ஒவ்வொரு முறையும் விசாவுக்கு விண்ணப்பிக்க தேவையில்லாமல், ஆயுட்காலம் முழுவதும், எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தியாவிற்குள் வரலாம்.

இந்தியாவில் தங்கியிருந்தாலும், வெளிநாட்டினர் போல் காவல் நிலையங்களில் பதிவு செய்யத் தேவையில்லை.

விவசாய நிலம்,பழம் மற்றும் தோட்டப்பயிர் நிலங்கள் வாங்குவது தவிர, நிதி மற்றும் கல்வி துறைகளில் அனைத்து உரிமைகளும் கிடைக்கும்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெற முடியாத உரிமைகள்

இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை கிடையாது.

தேர்தல்களில் போட்டியிட முடியாது.அதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைவகள்,மாநில சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பினராக ஆக முடியாது.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் உயர்பதவிக்கான குடியரசுத் தலைவர், குடியரசு துணை தலைவர்,உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி வகிக்க முடியாது.

மத்திய மாநில அரசுப் பணிகளில் சேர முடியாது.

நன்றி வாசகர்களே.!

உங்கள் கருத்துக்களை கமெண்ட்டில் தெரிவிக்கவும். 

மு.ர.