மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் - 1993 - பாகம் - 3
சட்டம்

ஆணையத்தின் செயல் பாடுகள் (பிரிவு 12)
ஒரு பொது பிரச்சினைக்காக தாமாக முன் வந்தோ அல்லது பாதிக்கப்பட்ட அல்லது யாராவது ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனித உரிமை மீறல் மனு மீது ஆணையம் நடவடிக்கை எடுக்க முடியும்.
மனித உரிமையை மீறுவது, உரிமையை பறிப்பது, ஒரு அரசுப் பணியாளர் மீது கொடுக்கப்பட்ட மனித உரிமை மீறல் குறித்த புகார் குறித்த நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படாதது ஆகியவை குறித்து ஆணையம் விசாரிக்கும்.
நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள மனித உரிமை மீறல் குறித்த வழக்கு குறித்த புகார் மீது சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் ஆணையம் நடவடிக்கை எடுக்கலாம்.
அணுகுமுறை, சீர் திருத்தம் அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்காக மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைச்சாலைகள் அல்லது காவல் நிலையத்தில், காவலில் வைக்கப்பட்டுள்ள நபர்களின் வாழ்க்கை நிலையை ஆராய்வதற்கும், அது குறித்து பரிந்துரைகள் (சிபாரிசுகள்) செய்வதற்கும் மாநில உரிமை ஆணையத்திற்கு உரிமை உள்ளது. ஆனால் அது குறித்து மாநில அரசுக்கு முன் கூட்டியே ஆணையம் தகவல் தெரிவித்திருக்க் வேண்டும்.
மாநில மனித உரிமை ஆணையம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அல்லது அப்போதைக்கு அமலில் உள்ள சட்டத்தின் கீழ், மனித உரிமைகளின் பாதுகாப்புக்காக வகை செய்யப்பட்டுள்ள நடைமுறைகளை மறு ஆய்வு செய்யலாம். அத்துடன் அவற்றை திறம்பட செயல்படுத்துதவதற்கான நடைமுறைகளையும் பரிந்துரை செய்யலாம்.
வன்முறைச் செயல்கள் (தீவிரவாதம்) போன்ற மனித. உரிமைகளை மீறும் சம்பவங்கள் பற்றி ஆய்வு செய்யவும், அவற்றிற்கான தீர்வுகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கான பரிந்துரைகளை செய்யலாம்.
( மனித உரிமைகள் பாதுக்காப்புச் சட்டம் பாகம் 2 ன் லிங்க் )
https://newstodaytamil.com/The-Protection-of-Human-Rights-Act---1993-Part-2
மனித உரிமை மீதான உடன்படிக்கைகள், பிற நாடுகளில் பின்பற்றப்பட்டு வரும் மனித உரிமை மீறலுக்கு எதிரான நடைமுறைகள் குறித்து ஆராயவும், அவற்றை நம் நாட்டில் திறம்பட செயல்படுத்துவதற்கான பரிந்துரைகளையும் முன் வைக்கலாம்.
மனித உரிமைகள் பற்றிய துறையியல் ஆராய்ச்சிகளை மேற்க்கொள்ளவும், அதனை மேம்படுத்தவும் பல கள ஆய்வுகளை மேற்கொள்ளும் பணியினை ஆணையமே மேற்கொள்ளலாம்.
சமுதாயத்தின் பல்வேறு பிரிவு மக்களிடையே, மனித உரிமைகள் பாதுகாப்பு குறித்த கல்வியை, விழிப்புணர்வை ஏற்படுத்த, பொதுமக்கள் தொடர்பு சாதனங்கள், கருத்தரங்குகள், ஊடகங்கள், செய்திகள், பிரசுரங்கள் மூலம் ஆணையம் முயற்சிகள் மேற்கொள்ளலாம்.
மனித உரிமைகள் குறித்து பணியாற்றி வரும் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் மனித உரிமைப் பாதுகாப்பு முயற்சிகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கலாம்.
மனித உரிமை மேம்பாட்டுக்குத் தேவையானது என்று கருதும் வேறு பணிகளையும் மாநில மனித உரிமை ஆணையம் மேற்கொள்ளலாம்.
மு.ர. தொடரும்
சட்டம், குற்றம், மருத்துவம் என பல விசயங்களை எழுதுவதன் நோக்கம் அனைவரும் அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே.!
ஒவ்வொரு குடிமகனும் சட்டத்தை அறிந்து வைத்திப்பது கடமயே. அதன்படி எழுதுகிறேன்.
அறிந்து கொள்ளுங்கள் அனைவருக்கும் அறியச் செய்யுங்கள் இந்திய அரசியலமைப்பின்பால் உள்ள சட்டங்களை
நன்மையான விசயங்களுக்கு பயன்படுத்துங்கள் வாசகர்களே.!
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi (MR)
தொடர்புக்கு
97 87 41 64 86