மனித நேய மக்கள் கட்சி மற்றும்  கூட்டணி கட்சிகளின்  சார்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம்

அருப்புக்கோட்டை

மனித நேய மக்கள் கட்சி மற்றும்  கூட்டணி கட்சிகளின்  சார்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக கோரி ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை விருதுநகர் கிழக்கு மாவட்டம் மனித நேய மக்கள் கட்சி மற்றும்  கூட்டணி கட்சிகளின்  சார்பாக சட்ட மாமேதை டாக்டர் பாபா சாகிப்  அம்பேத்கரை அவமதித்து பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமிதஷா - வை பதவி விலக கோரி மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் -1993 பாகம் - 1 -

ஆர்ப்பாட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் A.சுல்தான் ஆபிதீன் கண்டன உரை ஆற்றினார். விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் T.மதார்கான் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் அப்துல் கரீம் முன்னிலை வகிக்க , மாவட்ட மமக துணை செயலாளர் பூலாங்கால்  முகமது அஜ்மல் கான், மாவட்ட பொருளார் கமர்தீன், அருப்புக்கோட்டை நகர தலைவர் A.சேக் அப்துல்லாஹ் நகர தமுமுக செயலாளர் R.செய்யது அலி நகர மமக செயலாளர் S.முகமது யூசுப், நகர தமுமுக துணை செயலாளர் M.அகமது முஜமில், ஆவுடையாபுரம் நிர்வாகிகள்,பந்தல்குடி நிர்வாகிகள்,நகர உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் ஆர்பாட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி, இந்திய கம்யுனிஸ்ட் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, திராவிடர் கழகம் நிர்வாகிகள், மற்றும் சமூக அக்கரை கொண்ட பொது மக்கள் என பலரும் திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை சிறப்பித்தனர்.

அன்சாரி