டி.கே.சாமி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெற்ற சர்வதேச யோகா தினம் .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி டி.கே.சாமி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெற்ற சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு நடைப்பெற்ற யோகாவில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு.
கிருஷ்ணகிரி நகரம், புதுப்பேட்டையில் அமைந்துள்ள டி.கே. சாமி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெற்ற 11 வது சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. பள்ளி முதல்வர் திருமதி, பிரபா செவியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வமுடன் பங்கேற்று இருந்தனர்.
மேலும் இந்த நிகழ்வின் தொடக்கமாக அனைத்து மாணவர்களும் சீராக வரிசையாக யோகா மேடையில் நிலைநிறுத்தப்பட்டனர். பின்னர் இசையின் பின்னணியில் சூரிய நமஸ்காரம், ஆசனங்கள் உள்ளிட்ட பல யோகா பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது,
இதில் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஏஜாஸ் அவர்களின் வழிகாட்டுதலில் மாணவர்களின் உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் யோகாவின் முக்கியத்துவத்தை பற்றி மாணவ, மாணவிகளுக்கு விரிவாக விளக்கப்பட்டது.
மேலும் நிகழ்ச்சி முடிவில் டி.கே.சாமி பள்ளி முதல்வர் மாணவர்களுக்கு வாழ்த்துரையாற்றி, யோகா தினத்தின் மூலம் ஆரோக்கிய வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
மேலும் சர்வதேச யோகா தினத்தை சிறப்பிக்கும் வகையில் பள்ளி தாளாளர் பிரான்சிஸ் செவியர், பள்ளி முதல்வர் திருமதி பிரபா செவியர், பள்ளி இயக்குனர் செல்வி, மேரி சோபியா ராணி, பள்ளி துணை முதல்வர் வெங்கட்ராமன் மற்றும், இருபால் ஆசிரியர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ