சாமந்தமலை கிராமத்தில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்.!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே உள்ள சாமந்தமலை கிராமத்தில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் ஜூலை 5-ம் தேதி நடைபெறும் உழவர் தினப்பேரணியில் பெரும் திரளாக விவசாயிகள் கலந்துக் கொள்ள வேண்டும் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராமகவுண்டர் வேண்டுகோள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் சாமந்த மலையில் தமிழக விவசாயிகளின் சார்பில் ஜூலை 5-ம் தேதி நடைப்பெற உள்ள உழவர் தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுவதையொட்டி விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக்கூட்டத்திற்கு மகளிர் அணித்தலைவர் திருமதி பெருமா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு இளைஞர் அணி செயலாளர் அனுமந்தராசு, அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராம கவுண்டர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினர்.
மேலும் இக்கூட்டத்தின் போது வருகின்ற ஜுலை 5 ஆம் தேதி கிருஷ்ணகிரியில் நடைபெற உள்ள உழவர் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் விவசாயிகள் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் அப்போதுதான் நமது கோரிக்கைகளை அரசுக்கு எடுத்து கூறி கோரிக்கைகளை நிறைவேற்றப்படும். ஆகையால் இந்த உழவர் தின பேரணிக்கு விவசாயிகள் பாகுபாடின்றி கலந்துக் கொண்டு கோரிக்கையை வென்றெடுக்க வேண்டும். ஆகையால் விவசாயிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் இந்த கூட்டத்தின் வாயிலாக வேப்பனஹள்ளி வனப்பகுதிகளில் உலா வரும் யானைக்கூட்டத்தினை ஆந்திரா வனப்பகுதிக்குள் விரட்டப்பட வேண்டும், காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு காட்டு பன்றிகளை சுட்டு கொல்ல உரிய அனுமதி அளிக்கப்பட வேண்டும், தமிழக அரசு ஆந்திரா மாநிலத்தினை போல தமிழக அரசு மாங்காய்க்கும் உரிய விலை நிர்ணையம் செய்ய வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
அப்போது தமிழக விவசாய சங்கத்தினை சேர்ந்த சினிவாசன், ஜெயராமன், மாணிக்கம், தங்கவேல், பெருமாள், ராஜீவ் காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ