தென்காசியில் மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி ஆலோசனைக் கூட்டம்.!
தென்காசி

தென்காசியில் மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி ஆலோசனைக் கூட்டம்
மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் பங்கேற்பு
மே19 ல் தென்காசி வருகை தரும் கனிமொழி எம்.பிக்கு ஆலங்குளத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்க தீர்மானம்
தென்காசி மே 17
தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் வைத்து தென்காசி தெற்கு மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி ஆலோசனைக் கூட்டம் இன்று நடை பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார்.மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சங்கீதா சுதாகர் வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் திவ்யா மணிகண்டன் நோக்க உரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் தென் மாவட்ட பொறுப்பாளராக கனிமொழி கருணாநிதி எம்பி யை நியமித்த தமிழக முதல்வரும் கழக தலைவருமான மு.க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது.
மே 19 ல் தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு வருகை தரும் கழக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி க்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் ஆலங்குளத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்கவும், பாசறை கூட்டத்திற்கு மகளிர்களையும் ஒன்றிய நகர மற்றும் பேரூர் கழக நிர்வாகிகளையும் திரளாக அழைத்து கலந்து கொள்ள இக்கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர்கள், தொண்டரணி துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்