தமிழின் தொன்மை, தமிழன் வரலாறு தமிழன் நாகரிகம்  தெரியாமல் பேசும் அறிவிலி மத்திய கல்வி அமைச்சர்.! ஆம் ஆத்மி தலைவர் வசீகரன் கண்டனம்.!

தமிழகம்

தமிழின் தொன்மை, தமிழன் வரலாறு தமிழன் நாகரிகம்  தெரியாமல் பேசும் அறிவிலி மத்திய கல்வி அமைச்சர்.! ஆம் ஆத்மி தலைவர் வசீகரன் கண்டனம்.!

தமிழின் தொன்மை, தமிழன் வரலாறு தமிழன் நாகரிகம்  தெரியாமல் பேசும் அறிவிலி மத்திய கல்வி அமைச்சர்!

ஆம் ஆத்மி தமிழக தலைவர் வசீகரன் கடும் கண்டனம்! 

பாராளுமன்ற முதல் நாள் நேற்றைய கூட்டத்தில்  தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய கல்வி நிதி தொகையான ரூ2112 கோடி நிதியை வழங்க வேண்டும் என்று கேட்டார்,

சட்டப்படியான நிபந்தனை ஏதும் இல்லாத நேரத்தில் ஒரு கொள்கையை மாநில அரசு விரும்பாத நேரத்தில் அதை திணிக்க கூடாது  
அதற்காக கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காமல் தமிழ்நாட்டை வஞ்சிக்க கூடாது என்று அவர் கேட்டதற்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்ன பதில் என்பது அங்கிருந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிர செய்தது இதனால் அவையையே ஒத்தி வைக்கக்கூடிய நிலை ஏற்பட்டது

தமிழ்நாடு வரலாறு படிக்காத ஒன்றிய கல்வி அமைச்சர் தமிழர்களையும், தமிழ் நாட்டையும்  பற்றி இழிவாக சொன்ன வார்த்தைகள் தமிழர்கள் ஜனநாயக விரோதிகள், ஜனநாயகமற்றவர்கள், அநாகரிகமாணவர்கள் என்று அவர் பேசிய தொணி அனைவரின் கண்டனத்திற்கும் ஆளாகி இருக்கிறது.

சொல்வதை சொல்லிவிட்டு
அவரே தான் கூறிய ஜனநாயக விரோத மிக அநாகரிகமான வார்த்தைகளை தான் திரும்ப பெறுவதாக பாராளுமன்ற அவையில் பேசியுள்ளார் இந்த முட்டாள் ஒன்றிய கல்வி அமைச்சர்.

மொழி கல்வி, தொகுதி மறுவரையரை  நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்சனையாக தமிழ்நாட்டில் இருந்து மீண்டும் கிளம்புகிறது.

 நாடாளுமன்றம் என்பது ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் கேள்வி எழுப்பதற்கான உரிமை அங்கு இருக்கிறது அதனால் தான் அங்கே கேள்வி எழுப்பப்படுகிறது இந்தியாவில் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு மட்டும் எதிர்க்கிறது என்கிற செய்தி இந்தியா முழுவதும் ஒரு பேசும் பொருளை உருவாக்கி இருக்கிறது.

அதற்கு பதிலளித்த ஒன்றிய கல்வி அமைச்சர் உங்கள் மாணவர்களை நீங்கள் வஞ்சிக்கிறீர்கள் புதிய கல்வி கொள்கையை முதலில் ஒப்புக்கொண்டுவிட்டு இப்பொழுது அதை செய்ய மறுக்கிறீர்கள் யூ டர்ன் போடுகிறீர்கள் என்பது அமைச்சரின் வாதமாக உள்ளது.

 இதற்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தகுந்த விளக்கத்தை தந்திருக்கிறார். தொடர்ச்சியான கடிதப் போக்குவரத்து இரு அரசுகளுக்கு இடையில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும்
அந்த கடிதத்தில் தமிழ்நாடு அரசு நாங்கள் ஒரு குழு அமைத்திருக்கிறோம் அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப் போகிறோம் என்று சொல்லியிருக்கிறார், அதோடு அதில் நாங்கள் புதிய கல்விக் கொள்கையை ஏற்கிறோம் ஆனால் அதில் உள்ள சரத்துகளில் சில மாற்றங்களை நீங்கள் செய்ய வேண்டும் செய்தால் தான் அதை ஏற்போம்
என்று ஏற்கனவே விளக்கமளித்து இருக்கிறார் தமிழக முதல்வர்.

ஆனால் மத்திய அமைச்சர் தேசிய கல்வி கொள்கையை தமிழக அரசு அதை ஏற்றுக் கொண்டதாகவும் அதை  தற்பொழுது மறுப்பதாகவும்  சொல்வது ஒரு பொய்யான தகவல் ஆகும்.

 ஜனநாயகத்தில் மாநில அரசு என்பதும் மாநில முதலமைச்சர் என்பவரும் மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
ஆகவே மாநில  அரசின் கொள்கைக்கு எதிராக தேசிய கல்விக் கொள்கை இருக்கிறது என்கிற போது ஜனநாயகத்தை மதித்து அரசியல் சாசன சட்டத்தை மீறாமல் மாநில அரசுகளின் உரிமைகளை மதித்து மத்திய அரசு தன் கொள்கைகளை திணித்திட மாநில அரசுக்கு தரவேண்டிய தமிழக மக்கள் செலுத்திய வரிப்பணத் தொகை பங்கை
பிளாக் மெயில் செய்யாமல் தமிழக மக்களுக்கு வழங்க வேண்டும் அதை தவிர்த்து விட்டு ஜனநாயகத்திற்கு எதிராக
 நாகரிகமற்ற முறையில் தமிழர்களையும்  தமிழ்நாட்டையும் இழிவாக பேசிவிட்டு
 பின்னர் தான் பேசியதை எதிர்ப்பு வந்தவுடன் திரும்பப் பெறுகிறேன் என்று சொல்லுவதும் ஏமாற்று வேலை ஆகும்.
 

அவர் தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், பள்ளி குழந்தைகளுக்கு துரோகம் செய்யும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மந்திரா பிரதான் பதவி விலக வேண்டும்.

பாஜக ஒன்றிய அரசு இதுபோன்று தமிழர்களை  இழிவு படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக ஆம் ஆண்டு கட்சி சார்பில் கேட்டுக்கொள்வதோடு கடும் கண்டனத்தையும் பதிவு செய்கிறேன் என ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாடு தலைவர் வசீகரன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )